Friday, January 30, 2009

நிமலராஜன் இனிவருவனவற்றிற்கு ஒரு குறியீடு!


பத்திரிகையாளர் நிமலராஜனின் படுகொலைச் சம்பவம் இலங்கையில் இதற்கு முன்னர் கொல்லப்பட்ட எந்தவொரு பத்திரிகையாளருக்கும் கிடைக்காத எதிர்ப்பலைகளையும், அனுதாபங்களையும் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் இதில் முக்கியமாக நோகத்தக்க இன்னொன்றும் உள்ளது. தமிழ் பத்திரிகையாளருக்கு எதிரான முதல் வன்முறை இதுவல்ல என்பதை முழு நாட்டு மனித உரிமையாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அறிவிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னர் சிங்கள தொடர்பூடககங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கோ, வந்முனை நடவடிக்கைளோ இடம்பெற்றதும் அது எந்தளவு முக்கியத்துக்குரிய செய்தியாக ஆக்கப்படுகிறது என்பதும், அதற்கு எதிராக தேசிய அளவிலும், சர்வதேச அளவலும் எந்தளவு எதிர்நடவடிக்கைகளும், கண்டனங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன என்பதற்கு சம்பவங்கள் ஏறாளம் உள்ளன. தமிழர்களின் தலைவிதி இப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அவர்கள் கொல்லப்படவே வேண்டும் என்பது தான். இதனால் தான் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தேவைப்பட்டதும், ஆரம்பிக்கப்பட்டதும். மேலும் நிமலராஜனின் படுகொலையை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைக்கு இன்னுமொரு காரணம் அவர் சிங்கள மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிமுகமானவர் என்பதும். வெறும் தமிழ் தெரிந்த தமிழ் பத்திரிகையோடு மட்டுமே தொழிபுரிகின்ற பத்திரிகையாளர்ளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எதிர்க்க நாதியில்லாத நிலையே இது வரை இருந்து வருகிறது. தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆரம்பித்ததன் பின்னர் தான் தமிழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் வெளிக்கொணரப்படுகின்றன.

சரிநிகரில் பணியாற்றிய குகமூர்த்தி 1991இல் பிரேமதாச அரசாங்கத்தால் காணாமல் ஆக்கப்பட்டபோது அதற்காக குரல்கொடுக்க சரிநிகர் மட்டுமே இருந்தது என்பதையும் வாசகர்களுக்கு நினைவுருத்த விரும்புகிறோம்.

எந்தவொரு அடக்குமுறை ஆதிக்க அரச இயந்திரமும் தமது அடக்குமுறைகளை செவ்வனே நிறைவேற்ற தொடர்பூடகங்களை தமது கட்டுப்பட்டுக்குள் வைத்திருக்க சகல வித உபாயங்களையும் கையாள்வது வழக்கமே. அவ்வாறான நடவடிக்கையின் அங்கமாகவே படுகொலைகளையும் பார்க்கவேண்டியிருக்கிறது. பிரேமதாசா காலத்தில் சிங்கள இளைஞர்களின் மீதான சரவேட்டையை நடத்துவதில் ஒட்டுமொத்த தொடர்பூடகங்களுமே தடையாக இருப்­பதைக் கண்டு அவ்வாறானவர்களை தேடித்தேடி வேட்டையாடினான். தொடாபூடகங்களை நசுக்குவதில் இலங்கையின் வரலாற்றில் அதற்கு முன்னர் அனைவரையும் மிஞ்சினான். இன்று சந்திரிகா பிரேமதாசவையும் மிஞ்சிவிட்டார். இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே தமிழ் தொடர்பூடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. போpனவாதமயப்பட்டு வருகின்ற சிவில் சமூக அமைப்பில் தமிழ் தொடர்பூடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து சக சிங்கள பத்திரிகை உலகம் கூட அலட்டிக்கொள்ளாதது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை தான்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை தடை செய்கின்ற வர்த்தமானி அறிவித்தலை அரசு அறிவித்த போது சிங்கள பேரினவாத இயக்கங்கள் மாத்திரமல்ல சிங்கள தொடர்பூடகங்கள் பல கூட மகிழ்நதன. அந்த மகிழ்ச்சியில் சொக்கிப் போயிருந்த நிலையில் கூடவே அந்த தடை அறிவிப்பு சரத்துகளில் சில கருத்துச்சுதந்திரங்களை பறிக்கின்ற ஏற்பாடுகள் இருந்ததைக் கூட கவனிக்கவில்லை. சரிநிகர் உள்ளிட்ட சில தமிழ் பத்திhpகைகள் தான் அதனை சுட்டிக்காட்டியிருந்தன. அதன் பின்னர் சில நாடக்ள் கடந்து தான் சுதந்திர பத்திரிகை ஊடக இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் இயக்கங்களும் கண்டனங்களை வெளியிட்டன. ஆனால் ஒன்றும் பண்ணமுடியவில்லை. ஏனென்றால் அறிக்கை விட்டால் தங்கள் கடமை முடிந்துவிடும் என்கிற ஒரு மரபு செயற்பாட்டாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல இயக்கங்கள் மத்தியில் வந்துவிட்டது தான். அதன் பின்னர் தான் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்ச சட்டம் மட்டுமல்ல இந்த புலித்தடைச் சட்டத்தைக் கூட அரசு பிரயோகித்து அதன் பின்னர் அனைத்து கருத்துச் சுதந்திரங்களையும் பறித்தது. அரசு நேரடியாக செய்ய இருந்ததை ஏனைய சக்திகள் செய்தால் அத்தகைய சக்திகளை பாதுகாப்பது அரசின் கடமையாகி விடுகின்றது. அந்த வகையில் ஈ.பி.டி.பி.க்கு அரசு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

செய்தித் தணிக்யையைக் கொண்டுவந்தது. செய்தித் தணிக்கை அதிகாரியாக இராணுவ அதிகாரியை நியமித்தது. மீறியதாக குற்றம் சாட்டி, உதயன், இரிதா பெரமுன, சண்டேலீடர் போன்ற பத்திரிகைகளை மூடியது. சர்வதேச செய்தி ஊடகங்கள் மீதும் தணக்கையை பிரயோகித்தது. அரசை விமர்சித்து எழுதிய பலருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது, கைது செய்து சிறையிலடைத்தது. அரச படைகளைக்கொண்டு தாக்கியது. சிலர் கொல்லப்பட்டார்கள். (பார்க்க பட்டியல்) இவற்றுக்கு எதிராக அமைதியாக ஊர்வலங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றை நசுக்கியது. இது வரை வரலாறு இலங்கை வரலாற்றில் எந்த ஒரு ஆட்சியிலும் நடக்காத அளவுக்கு தொடர்பூடகங்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. எந்த பிரேமதாசவை விமர்சிக்கவும் கவிழ்க்கவும் தொடர்பூடக சுதந்திரப் பறிப்பை இந்த பொ.ஐ.மு. பிரச்சாரமாக பாவித்து ஆட்சியில் அமர்ந்ததோ அதே பொ.ஐ.மு.வினால் தொடர்பூடக சுதந்திரப் பறிப்பில் வரலாற்று சாதனையை படைத்தது. இறுதியாக நடந்து முடிந்த 11வது பொதுத்தேர்தலின் போது பொ.ஐ.மு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொடர்பூடக சுதந்திரம் பற்றி எதுவுமே கூறாத அளவுக்கு அது கருத்துச் சுதந்திரம் குறித்து பேச சகல வித தார்மீகத்தையும் இழந்து விட்டிருந்தது. (பொ.ஐ.மு அரசாங்க காலத்தில் நடந்த சகல கருத்துச் சுதந்திர பறிப்புகளையும் கீழ் குறிப்பிட்ட இணையத்தளங்களில் விலாவாரியாக பட்டியல்களை இட்டிருக்கின்றன.)

இவ்வருடத் தொடக்கத்திலிருந்து ஒக்டோபர் வரை 36 தொடர்பூடகவியலாளர்கள் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் நிறுவனம் (IPI-International Press Institute) எனும் சுவிஸில் இயங்கும் அமைப்பு தெரிவிக்கிறது. 1999இல் மொத்தம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1998இல் 31பேர் கொல்லப்பட்டிருந்தனர். 1997 இல் 27 பேர் கொல்லப்பட்டிருந்தனர். உலகப் பத்திரிகை நிறுவனம் எனும் (World Association of Press) எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் சென்ற வருடம் உலகம் முழுவதும் கொல்லப்பட்ட பத்திபிகையாளர்களின் எண்ணிக்கை 54 என்கிறது. பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு (Committee to Protect Journalists-CPJ) எனும் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை இலங்கையில் இடம்பெற்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பட்டியலையே இட்டிருக்கிறது.

பொ.ஐ.மு வின் காட்டாட்சி போய் பேயாட்சி நிறுவப்பட்டுள்ள நிலையில் அடக்குமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இனி நிலைமை மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே தெரிகின்றன. எனவே இன்னும் பல நிமலராஜன்களும், ரோகண குமாரக்களும் அதிகரிக்கத் தான் போகிறார்கள். நிமலராஜன் அரசின் இனி அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைக்கான குறீயீட்டு எச்சரிக்கை மட்டுமே. இந்த நிலையில் தான் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களின் ஒன்றிணைந்த செய்பாடுகளின் அவசியம் கண்டிப்பாகின்றது. ஆக முரண்பட்டு அழிவோமா சேர்ந்து போராடி வெல்வோமா என்கிற நிலைப்பாட்டை அனைவருமாக எடுப்போமாக.